ஆனாலும் H.ராஜா கைது செய்யப் படவில்லை
மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் மாண்புமிகு ஜெயச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் சோபியா ஆஜரானார். விமானத்தில் பாரதிய ஜனதாக் கட்சியை எதிர்த்து “பாசிச பாஜக ஒழிக” என்று கோஷமிட்டதற்காக கைது செய்யப்பட்டவர். பிறகு அவரை எப்படியெல்லாம் ஒழுங்காக வளர்க்க வேண்டும் அவரது தந்தைக்கு ஏகத்துக்கும் பாடம் நடத்தியபிறகு நீதிமன்றம் அவருக்கு பினை தந்திருக்கிறது என்பதெல்லாம் அனைவரும் அறிந்ததே.அப்போது தாமதமாய் ஆஜரான புதுக்கோட்டை ஆய்வாளாரும் இந்த வழக்கின் விசாரனை அதிகாரியுமான திரு திருமலை அவர்களிடம் நிறைய கடிந்துகொண்ட மாண்பமை ஜெயச்சந்திரன் அவரை நிறைய கேள்விகள் கேட்டிருப்பதை இன்றைய THE HINDU வெளியிட்டிருக்கிறது. அவற்றுள் முக்கியமான சில,1) Why you (the police) are so keen on arresting the research scholar though she had not committed any serious offence?
2) Neither the caption of the flight nor the cabin crew had filed any complaint. However you had taken the girl to the police station and kept her there for more than seven hours. Do you know the provisions of criminal procedure coder in this regardமேலுள்ள கேள்விகளை இப்படி பெயர்க்கலாம்1) குறிப்பிட்டு சொல்லும்படியான எந்தஒரு பெருங்குற்றத்தையும் செய்யாத இந்த ஆராய்ச்சி மாணவியை கைது செய்வதில் நீங்கள் இவ்வளவு முனைப்பு காட்டவேண்டிய அவசியம் என்ன?
2) அந்த விமானத்தின் தலைவரோ ஊழியர்களோ உங்களிடம் எந்தப் புகாரும் அளிக்காத நிலையில் நீங்கள் அந்த மாணவியைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஏழு மணிநேரத்திற்கும் மேலாக அவரை அங்கே வைத்திருந்திருக்கிறீர்கள். இந்த விஷயத்தில் குற்றவியல் விதிமுறைகளையும் நடைமுறைகளையும் நீங்கள் அறிவீர்களா?’விதி முறைகள் உங்களுக்குத் தெரியுமா?’ என்ற அவரது கேள்வி காவல்துறையினரை எதுவும் செய்துவிடாது. அவர்கள் எது செய்ய அரசு ஆசைப்படுகிறதோ அதை அவர்கள் செய்வார்கள். மற்றபடி விதிமுறைகளையும் நடைமுறைகளையும் அறியாதவர்கள் அல்ல அவர்கள். இந்த உண்மை திரு ஜெயச்சந்திரன் அவர்களும் அறிந்ததுதான். தாங்க மாட்டாத கோவத்தில் வந்து விழுகிற வார்த்தைகள் அவை.1) அந்த எந்த ஒரு பெருங்குற்றத்தையும் செய்யவில்லை
2) விமானத்தில் எது நடந்தாலும் அது குறித்த புகாரை அந்த விமானத்தின் தலைவரோ அல்லது சிப்பந்திகளோதான் தரவேண்டும். அப்படி யாரும் புகார் தராத நிலையில் அவரைக் கைது செய்தது தவறு
3) ஒரு பெண்ணை ஏழு மணிநேரத்திற்கும் மேல் காவல் வைத்திருந்தது தவறுமேற்சொன்ன விஷயங்களை சோபியாவின் தந்தையும் கூறினார், தலைவர்கள் கூறினார்கள், நாமும் கூறினோம். இப்போது மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினரே கூறுகிறார்.ஆக புகார் கொடுக்க வேண்டியவர்கள் எந்த ஒரு புகாரும் கொடுக்காத நிலையிலேயே திருமதி தமிழிசை கேட்டுக் கொண்டதற்காக அந்தக் குழந்தையை காவல்துறை கைது செய்து ஏழுமணி நேரத்திற்கும் மேலாக காவல் நிலையத்தில் வைக்கிறது காவல்துறை.ஒரு பெண் இன்னொரு பெண்மீது புகார் தருகிறார் என்றால் காவல்துறை இருவரையும் விசாரித்திருக்க வேண்டும்.இது ஒருபுறம் இருக்க, திரு H.ராஜா நீதிமன்றத்தையே கெட்ட வார்த்தையால் திட்டுகிறார். ஊருக்கு ஊர் அவர்மீது புகார் அளிக்கப் படுகிறது. அவரைத் தேடுவதற்காக தனிப்படைகளே அமைக்கப் படுகிறது.அவர் தலை மறைவாகி விட்டபடியால் அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை என்று சொல்லப்படுகிறது. அடுத்தநாள் அவர் வேடசந்தூரில் காவல்துறை பாதுகாப்போடு அவர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.அங்கு அறநிலையத்துறை ஊழியர்களைக் கொச்சைப் படுத்தி பேசுகிறார். அதற்காகவும் அவர்மீது புகார் அளிக்கப் படுகிறது.ஆனாலும் அவர் கைதுசெய்யப் படவில்லை.தன்னிடம் விளக்கம் கேட்க நிதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்கிறார். இப்போதும் அவர் கைது செய்யப்படவில்லை.அந்த அளவிற்கு அசிங்கமாக பேசிவிட்டு நான் வீட்டிற்கு வந்தால் என் மனைவியும் மகளும் என்னை விளக்கமாறால் அடித்தே கொன்றிருப்பார்கள். ஊடகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களைக் குறித்து அவ்வளவு கேவலமாகப் பேசிய SV.சேகரை கைது செய்யாமல் அவருக்குப் பாதுகாப்பு அளித்தது காவல்துறை.இந்த நாடு யாருக்கானது என்ற கேள்விக்கு “கிட்டத்தட்ட அவாளுக்கானது” என்பது நாளுக்குநாள் உறுதியாகிக் கொண்டே வருகிறதா?அல்லது அவர்களை ஒன்றும் செய்யாதீர்கள் அவர்கள் இப்படியாக உளறுவதன் மூலம் ரஃபேலில் இருந்தும் மல்லையாவிலிருந்தும் மக்களின் கவனத்தை அவர்கள் வேறுபக்கம் இழுக்கட்டும் என்று வழிகாட்டுதல் வந்திருக்கிறதா?#சாமங்கவிந்து 34 நிமிடங்கள்
26.09.2018
2) Neither the caption of the flight nor the cabin crew had filed any complaint. However you had taken the girl to the police station and kept her there for more than seven hours. Do you know the provisions of criminal procedure coder in this regardமேலுள்ள கேள்விகளை இப்படி பெயர்க்கலாம்1) குறிப்பிட்டு சொல்லும்படியான எந்தஒரு பெருங்குற்றத்தையும் செய்யாத இந்த ஆராய்ச்சி மாணவியை கைது செய்வதில் நீங்கள் இவ்வளவு முனைப்பு காட்டவேண்டிய அவசியம் என்ன?
2) அந்த விமானத்தின் தலைவரோ ஊழியர்களோ உங்களிடம் எந்தப் புகாரும் அளிக்காத நிலையில் நீங்கள் அந்த மாணவியைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஏழு மணிநேரத்திற்கும் மேலாக அவரை அங்கே வைத்திருந்திருக்கிறீர்கள். இந்த விஷயத்தில் குற்றவியல் விதிமுறைகளையும் நடைமுறைகளையும் நீங்கள் அறிவீர்களா?’விதி முறைகள் உங்களுக்குத் தெரியுமா?’ என்ற அவரது கேள்வி காவல்துறையினரை எதுவும் செய்துவிடாது. அவர்கள் எது செய்ய அரசு ஆசைப்படுகிறதோ அதை அவர்கள் செய்வார்கள். மற்றபடி விதிமுறைகளையும் நடைமுறைகளையும் அறியாதவர்கள் அல்ல அவர்கள். இந்த உண்மை திரு ஜெயச்சந்திரன் அவர்களும் அறிந்ததுதான். தாங்க மாட்டாத கோவத்தில் வந்து விழுகிற வார்த்தைகள் அவை.1) அந்த எந்த ஒரு பெருங்குற்றத்தையும் செய்யவில்லை
2) விமானத்தில் எது நடந்தாலும் அது குறித்த புகாரை அந்த விமானத்தின் தலைவரோ அல்லது சிப்பந்திகளோதான் தரவேண்டும். அப்படி யாரும் புகார் தராத நிலையில் அவரைக் கைது செய்தது தவறு
3) ஒரு பெண்ணை ஏழு மணிநேரத்திற்கும் மேல் காவல் வைத்திருந்தது தவறுமேற்சொன்ன விஷயங்களை சோபியாவின் தந்தையும் கூறினார், தலைவர்கள் கூறினார்கள், நாமும் கூறினோம். இப்போது மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினரே கூறுகிறார்.ஆக புகார் கொடுக்க வேண்டியவர்கள் எந்த ஒரு புகாரும் கொடுக்காத நிலையிலேயே திருமதி தமிழிசை கேட்டுக் கொண்டதற்காக அந்தக் குழந்தையை காவல்துறை கைது செய்து ஏழுமணி நேரத்திற்கும் மேலாக காவல் நிலையத்தில் வைக்கிறது காவல்துறை.ஒரு பெண் இன்னொரு பெண்மீது புகார் தருகிறார் என்றால் காவல்துறை இருவரையும் விசாரித்திருக்க வேண்டும்.இது ஒருபுறம் இருக்க, திரு H.ராஜா நீதிமன்றத்தையே கெட்ட வார்த்தையால் திட்டுகிறார். ஊருக்கு ஊர் அவர்மீது புகார் அளிக்கப் படுகிறது. அவரைத் தேடுவதற்காக தனிப்படைகளே அமைக்கப் படுகிறது.அவர் தலை மறைவாகி விட்டபடியால் அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை என்று சொல்லப்படுகிறது. அடுத்தநாள் அவர் வேடசந்தூரில் காவல்துறை பாதுகாப்போடு அவர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.அங்கு அறநிலையத்துறை ஊழியர்களைக் கொச்சைப் படுத்தி பேசுகிறார். அதற்காகவும் அவர்மீது புகார் அளிக்கப் படுகிறது.ஆனாலும் அவர் கைதுசெய்யப் படவில்லை.தன்னிடம் விளக்கம் கேட்க நிதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்கிறார். இப்போதும் அவர் கைது செய்யப்படவில்லை.அந்த அளவிற்கு அசிங்கமாக பேசிவிட்டு நான் வீட்டிற்கு வந்தால் என் மனைவியும் மகளும் என்னை விளக்கமாறால் அடித்தே கொன்றிருப்பார்கள். ஊடகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களைக் குறித்து அவ்வளவு கேவலமாகப் பேசிய SV.சேகரை கைது செய்யாமல் அவருக்குப் பாதுகாப்பு அளித்தது காவல்துறை.இந்த நாடு யாருக்கானது என்ற கேள்விக்கு “கிட்டத்தட்ட அவாளுக்கானது” என்பது நாளுக்குநாள் உறுதியாகிக் கொண்டே வருகிறதா?அல்லது அவர்களை ஒன்றும் செய்யாதீர்கள் அவர்கள் இப்படியாக உளறுவதன் மூலம் ரஃபேலில் இருந்தும் மல்லையாவிலிருந்தும் மக்களின் கவனத்தை அவர்கள் வேறுபக்கம் இழுக்கட்டும் என்று வழிகாட்டுதல் வந்திருக்கிறதா?#சாமங்கவிந்து 34 நிமிடங்கள்
26.09.2018
Published on September 25, 2018 19:09
No comments have been added yet.
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)