சிங்கபூர் இசை நிகழ்ச்சி.எங்கள் கருப்பு ராக வேந்தனின் கையசைவுக்கு ஏற்ப வெள்ளை சீமாட்டிகளும் சீமான்களும் வயலைன் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.பெருமையும் திமிருமாய் கவனிக்கிறேன்.இதில் என்ன திமிர் வேண்டிக் கிடக்கு?இருக்கு.காந்தியாரை ரயிலில் இருந்து தள்ளும்போது அந்த வெள்ளையர்கள் சொன்னது,“கேவலமான கருப்பு இந்திய நாயே”இத்தனைக்கும் காந்தியார் நல்ல சிவப்பு. அவரையே அப்படி சொன்ன வெள்ளைச் சீமாட்டிகளும் சீமான்களும் எங்கள் கருப்பு ராக வேந்தனின் கை அசைவுக்கு இயங்குவதைப் பார்க்கும்போது ஏற்பட்ட பெருமையும் திமிரும் இது.ஜெய் ராக வேந்தா
Published on September 16, 2018 21:50