மக்கள் சொத்து...

இரண்டு நாட்களுக்கு முன்னால் Sarangapani Narayanasamy சாரை வழியில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் பகிர்ந்துகொண்ட ஒரு விஷயம் நெகிழ்த்தியது.

அந்தக் குடும்பத்தின் தலைவரும் இறந்து தலைவியும் இறந்துவிட்ட நிலையில் அவர்கள் வீட்டிற்கு எல்ஐசி பிரிமியம் இரண்டு தவணைகளை கட்டுமாறு கடிதம் போயிருக்குறது.

ஒரு விவரமும் புரியாத நிலையில் அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு எல்ஐசி அலுவலகம் வந்திருக்கிறாள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் இறந்து போனவரின் குழந்தை.

அவர் 5 லட்சத்திற்கு பாலிசி எடுத்திருந்திருக்கிறார். மரணம் வரைக்கும் ஒழுங்காகக் கட்டிக் கொண்டிருந்திருக்கிறார். அவர் பாலிசி எடுத்திருந்தார் விவரம் யாருக்கும் தெரியாது.

சாரங்கபாணி சாரும் அவரது நண்பர்களும் ஒரே வாரத்தில் பணத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த LIC யவாப்பா தனியாருக்குத் தரத் துடிக்கிறீங்க பாவிகளா
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 27, 2017 02:04
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.