கவிதை by சிவக்குமார் சூலூர்

A Guest Post by சிவக்குமார் சூலூர்குழந்தை கவிதை:

பூக்கள் அழகென்று கவிதை எழுதினேன் ; இன்று அப்பூக்களே தோற்றது நீ பூத்த புன்னகையால்

~~~~$$$~~~~
நீ உறங்கும் அழகினிலே நான் உறங்க மறந்தேன்

~~~~$$$~~~~
கலப்படமில்லா உன் சிரிப்பினிலே நான் கரைந்து போனேன்

~~~~$$$~~~~

உன்னை பற்றி கவிதை எழுத நானும் குழந்தையாகிறேன்

~~~~$$$~~~~

தொட்டிலில் உறங்கும் எனது கவிதை நீ

~~~~$$$~~~~

வீட்டினுள் வானவில் உன் சிரப்பினிலே

~~~~$$$~~~~

தலைகுனிந்தேன் உன்னை முத்தமிட தலைநிமிர்ந்தேன் உன் தந்தையாக

~~~~$$$~~~~

கவிதை எழுத மனமில்லை கவிதையாய் நீ இருக்க.

~~~~$$$~~~~
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 24, 2016 06:08
No comments have been added yet.