Jeyamohan > Quotes > Quote > Prem liked it
“ஆனால், மனிதன் அறிவது தன் அறிவை மட்டும்தான் என்று எப்போதாவது எண்ணியிருக்கிறாயா? மனிதனின் அறிவு அறியக்கூடுவது என்னும் எல்லைக்குள் அடங்கிவிடுகிறது. அதற்கப்பாலுள்ள எதையும் அவன் அறியமுடியாது. அந்த அறியக்கூடுவது என்பது மானுட மூளையின் இயல்பால் வரையறைசெய்யப்பட்டது. இப்படி சொல்கிறேன், மானுட மூளைக்கு ஓர் அமைப்பும் செயல்முறையும் உள்ளது. அந்த அமைப்புக்கும் செயல்முறைக்கும் ஏற்ப அது பிரபஞ்சத்தை அறிகிறது. அந்த அறிவை பிரபஞ்சம் என புரிந்துகொள்கிறது. அதாவது மூளை தன்னை வெளிப்பொருளில் ஒரு குறிப்பிட்ட வகையில் நிகழ்த்திப்பார்த்துக்கொள்வதுதான் பிரபஞ்சம் என்பது.”
―
―
No comments have been added yet.
