Nitya Chaitanya Yati > Quotes > Quote > Premanand liked it

Nitya Chaitanya Yati
“பெர்க்ஸனின் ஓர் உருவகக் கதை உண்டு. நதி ஒரே திசையில்தான் நகரமுடியும். நதிப்படகு இரு திசைகளிலும் நகரும். நதி மீன் நான்கு திசைகளில் நகரமுடியும். அதைப் பிடிக்கும் பறவை ஐந்து திசைகளில் நகரலாம். ஆனால் கரையோரமாக அமர்ந்து இவையெல்லாவற்றையும் பார்க்கும் ஒருவனின் மனம் எல்லா திசைகளிலும் நகரக்கூடும். நமது மனம், அதன் அன்றாட தளத்தில் உடலின் தருக்கங்களுக்கு கட்டுப்பட்டது. ஆகவே அனைத்துத் தருக்கங்களும் உடலின் தருக்கங்களே. உடலோ கால இடத்தில் உள்ளது. ஆகவே மனதின் ஆழத்தை நாம் உற்றுப் பார்க்கிறோம். அதுவே தியானம்.

எப்போது நாம் தத்தளிப்பின் எல்லையில் இனியென்ன என்று தவிக்கிறோமோ அப்போது நமது அந்தரங்கத்திலிருந்து அதுவரை நாமறிந்திராத ஓர் உள்ளொளி உதயமாகி நம்மை புதிய சாத்தியங்களின் வாசல்களை நோக்கி இட்டுச் செல்கிறது. அது தரும் தன்னம்பிக்கையும் துணிவும் என்றும் நமது வழித்துணையாக இருக்கும்.”
Nitya Chaitanya Yati, யதி: தத்துவத்தில் கனிதல்

No comments have been added yet.