அனிதா சரவணன் (Anitha Saravanan) > Quotes > Quote > Anitha liked it

“உன் பேருக்கு ஏத்த மாதிரி உன் முடியும் அருவி மாதிரி ஆர்ப்பரிக்குது, உன் கண்கள் ரெண்டும் மீன் போலத் துள்ளிட்டே இருக்கு…” என்று தொடர்ந்தவனை வலது கையை உயர்த்தி நிறுத்தினாள்.

“கண்ணு மீன் மாதிரி இருக்கு, புருவம் வில்லு மாதிரி இருக்கு, உதடு ரோஜா மாதிரி இருக்குன்னு இன்னும் பழைய இத்து போன வசனங்களைச் சொல்லி ரொம்பத் தவறான முகவரியில் புலம்பற…வேற ஆளை பாரு மேன்” என்றுவிட்டு இருக்கையில் இருந்து எழுந்தவளின் கையை இறுக பற்றினான் அஜயன்.

“நினைப்பு தான் புருவம் வில்லு, உதடு ரோஜான்னு…” என்று நக்கலாகச் சிரித்தவன்… “அவ்வளவு எல்லாம் என்னால பொய் சொல்ல முடியாது. ரெண்டு பொய் சொன்னதுக்கே நாக்கு தள்ளிடுச்சு” என்றவனின் கையை அலட்சியமாக உதறிவிட்டு சென்றாள்.”
அனிதா சரவணன் (Anitha Saravanan)

No comments have been added yet.