தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion

புதிய நீதிக் கதைகள்
13 views
சிறுகதைகள்/தொகுப்புகள் > புதிய நீதிக் கதைகள்

Comments Showing 1-1 of 1 (1 new)    post a comment »
dateUp arrow    newest »

Kadhai Solgiren (kadhaisolgiren) | 18 comments புதிய நீதிக் கதைகள்

சுஜாதாவின் எழுத்துக்கள் பாரம்பரியம் முதல் பாஸ்தா வரை பரிமாறும் பஃபே சிஸ்டம் (நவீன அட்சய பாத்திரம்). சயின்ஸ் , சமூகம் சஸ்பென்ஸ், சரித்திரம், சினிமா என்று எல்லா வகையும் பரிமாறப்படும். விருந்தின் இறுதியில் சாப்பிடும் ஐஸ்க்ரீம் போன்றதான சமயோசித அறிவை நகைச்சுவை சேர்த்து சொல்லப்பட்டவைதான் இந்த புதிய நீதிக் கதைகள்.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இதனை பதிவிடுகிறேன். சிறுவயதில் மனதில் ஆழமாய் பதியும் என்பதற்காகத்தான் கதைகள் வழி நீதியை குழந்தைகளுக்கு உணவுடன் சேர்த்து ஊட்டுகிறோம். இந்த தொகுப்பில் 130 கதைகள் உள்ளன. முன்னுரையில் சுஜாதா குறிப்பிட்டது போல் பெரும்பாலும் விலங்குகளை வைத்தே கதை சொல்லப்பட்டிருக்கிறது. சிலகதைகளுடன் அதேகருத்தை அறிவியலோடு சேர்த்துக்கொடுத்து நவீன வடிவம் என்றிருக்கிறார். ம்…இதுதானே உங்கள் பாணி என்று நம்மைச் சொல்ல வைத்திடுகிறார்.

முதல் கதை ‘கழுதையும் கோழியும்’ அட்டகாசம். வைக்கோல் களத்தில் நின்ற கழுதையிடம் வந்த சிங்கம் “நான் கழுதையெல்லாம் அடித்துச் சாப்பிடும் பழக்கம் இல்லை, என்ன செய்வது! பசிக்கொடுமை” என்று கழுதையைத் தாக்க வருகிறது. அந்த நேரத்தில் கோழி ஒன்று அபசுரமாக ஏறக்குறைய சுருட்டி ராகத்தில் கூவ, சிங்கத்திற்கு அலர்ஜியான அந்த சத்தத்தால் முன் பாதங்களால் காதை மூடிக்கொண்டு பின் பாதங்களால் ஓட, சும்மாயிராத கழுதை தைரியமாக ‘சிங்கம் பயந்தாரி ‘ என்று விரட்ட, கோழி கூவுவதை நிறுத்த, திரும்பிய சிங்கம் கழுதையை கபளீகரம் செய்துவிடுகிறது.

நீதி: தைரியம் வேண்டும்தான், அசட்டு தைரியமல்ல!

#நூல்விமர்சனம்(கதை சொல்கிறேன்) -> https://wp.me/pcbJpq-PI


back to top

64602

தமிழ் புத்தகங்கள் (Tamil Books)

unread topics | mark unread


Books mentioned in this topic

புதிய நீதிக் கதைகள் (other topics)