“மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்பதற்கு நீங்கள் வேறு அர்த்தம் செய்துகொண்டு இருப்பீர்கள். கர்வப் படுகிறவனின் மூச்சுக்கு அருகே, அதாவது மண்டையின் வாசலுக்கு அருகே போய் விடாதே. மதியாதார் என்பது உன்னை மதிக்காதவன் அல்ல. தன் மனோசக்தியை மதிக்காதவன். கடவுளை மதிக்காதவன். அவன் மூச்சு தலைவாசல் வெப்பமாய் இருக்கும். இடைவிடாத பொறாமையாய் சூடாய் இருக்கும். மூச்சு சூடானவர்கள் கண்கள் சிவந்து அடிக்கடி மேலே சொருகியும் உதடுகள் கீழ்நோக்கி இழிந்தும் காணப்படும். கோணலான சிரிப்பு ஏற்படும். அந்த மனிதன் தன் நடையழகை கவனித்துக்கொண்டே இருப்பான். தன் அசைவுகளைப் பிறர் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதற்காகவே அசைந்து கொண்டிருப்பான். மிதிக்காதே என்று சொன்னதன் அர்த்தம் என்ன தெரியுமா? இந்த மாதிரி கர்வமான மனிதர்கள் மலத்தைப் போன்றவர்கள். மலத்தைத் தெரியாது மிதித்துவிட்டதைப் போல எந்த முயற்சியும் இல்லாது இவர்கள் அருகே”
―
Balakumaran,
Kadalorak Kuruvigal