ராஜம் பேராசிரியர் மனசிலே இருக்கிற எடத்திலே இனி ஒரு மனுஷனும் ஏறி இருக்க முடியாது. அங்க அவருக்க சொந்த பிள்ளைக கூட இல்ல. ஏசு இப்பம் பூமிக்கு வந்தாருன்னு வைங்க, சட்டுன்னு ‘இந்தாலே ராஜம் இங்க வா’ன்னு அவரைத்தான் முதல்ல கூப்பிட்டு அறிமுகம் செஞ்சு வைப்பாரு..”