“ஊட்டி தமிழ்நாட்டுடன் இணைந்து ஒற்றுமையாக இருக்க முடியும் என்றால், தமிழ்நாடு இந்தியாவுடன் இருக்க முடியும் என்றால், ஏன் உலகம் ஒன்றாக இருக்க முடியாது?” என்றார். அந்தக் கேள்வியிலிருந்த ஏதோ ஒன்றால் நான் புன்னகை செய்தேன். ஊட்டியின் அந்த மலைச்சாலையில் ரிஷிகளைப்போல சிந்திக்கத்தோன்றும் போலும். “நீ சிரிக்கிறாய். இதை கிறுக்குத்தனம் என்கிறாய். நான் உலகின் இருநூற்று ஐம்பது நாடுகளில் பல்லாயிரம் பேர் இந்தச் சிரிப்பு சிரிப்பதை கவனித்திருக்கிறேன்... நூறுவருடங்களுக்கு முன் கறுப்பனும் வெள்ளையனும் சமம் என்று சொன்னபோது இப்படித்தான் சிரித்திருப்பார்கள். இருநூறுவருடம் முன்பு மனிதனை அடிமையாக விற்பதும் வாங்குவதும்
...more