கோபமே அடங்காத துர்தேவதை மாதிரி வயிறு பொங்கிக்கொண்டே இருக்கும். கூரைக்கு பிடித்த தீ போன்றது பசி என்று என் பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதில் கைக்குக் கிடைத்ததை எல்லாம் அள்ளிப் போட்டு அணைக்க வேண்டியதுதான். அது நல்லதா கெட்டதா என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. பசியை விட வேறு எதுவும் கொடியது அல்ல.