சாதி என்பது குரூரமான எதார்த்தம்
Rate it:
Kindle Notes & Highlights
15%
Flag icon
சாதி என்பது குரூரமான யதார்த்தம். சமூகம் என்பதே இங்கு சாதியின் அடுக்குகளாகத்தான் இருக்கிறது. இதை மாற்ற வேண்டும் என்பதே வேறு விஷயம். ஆனாலும், இதைத் தவிர்க்க முடியவில்லை. இங்கே தனி நபர்கள் என்று யாரும் இல்லை. எல்லார் மீதும், விரும்பியோ விரும்பாமலோ சாதி போர்த்தப்பட்டிருக்கிறது.
16%
Flag icon
மக்கள் ஒரு கட்டத்தில் தங்களது கலாசாரத்தின் பிரதிநிதியாக கடவுளை ஆக்குவார்கள்.
18%
Flag icon
இந்தியாவிலேயே தனித்த தன்மையுடைய பெண் தெய்வம். திருமணம் ஆகாத ஒரு கன்னிப்பெண் முடிசூடி ஆளுகிறாள் என்கிற கதை இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. அந்த அளவுக்குத் தொன்மையான தெய்வம்.
Sugan liked this
21%
Flag icon
சாதிய அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் பிறப்பதற்கு முன்பே இந்தத் தெய்வங்கள் பிறந்துவிட்டன. இந்த ஆன்மிகம் நாட்டு மக்களின் ஆன்மிகம். அதிகாரச் சார்பற்ற ஆன்மிகம். மற்றவர்களையும், மற்றவற்றையும் ஏற்றுக்கொள்கிற ஆன்மிகம்.
Sugan liked this
22%
Flag icon
மிகப்பெரிய ஆன்மிக மையமாக விளங்குகிற கோயிலை அரசு அதிகாரம் தனக்கென எடுத்துக்கொள்கிறது. பழநி கோயிலில் முன்பு பூஜை செய்தது பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர். ஆனால், திருமலை நாயக்கர் காலத்தில் தளவாயாக இருந்த ராமப்பையர் இன்னொரு சமூகத்தினர் கையிலிருந்து திருநீறு வாங்குவதை விரும்பவில்லை. இதையடுத்து அங்கு பூஜை செய்யும் உரிமை பிராமணர்களுக்கு மாறுகிறது. இதே மாதிரி, கதைப் பாடல்களின்படி பார்த்தால் ராமேஸ்வரம் கோயிலிலும் பூஜை செய்திருப்பது பிற்படுத்தப்பட்ட சமூகம்தான். பிறகு, அங்கும் மாற்றப்பட்டிருக்கிறது. அரசு அதிகாரம் உள்ளே நுழைய நுழைய எளிய மக்கள், உணர்வு ரீதியாக அந்தக் கோயிலில் இருந்து விலகிவிடுகிறார்கள்.
24%
Flag icon
சபரிமலை ஆகட்டும், மேல்மருவத்தூர் ஆகட்டும் அவையெல்லாம் மத்திய தர வர்க்கத்து ஆன்மிகம். அடித்தள, எளிய மக்களின் ஆன்மிகம் அல்ல. எளிய மக்களின் கனவில் ஒருபோதும் சிவபெருமான் வரமாட்டார்.
Sugan liked this
26%
Flag icon
இருக்கிறது. ஒரே தெய்வக் கோட்பாடு என்பது அரசு உருவாக்கத்திற்குத் தேவையானது. ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்பதெல்லாம் மக்கள் விரோதச் சித்தாந்தம் என்றே நான் கருதுகிறேன்.
Sugan liked this
34%
Flag icon
முதலில் சாதிய மறுப்பைக் கோயில் கருவறைகளில் இருந்து துவக்குங்கள். பிறப்பு வழிப்பட்ட மேலாண்மையைக் கோயில்களின் மூலமாக தக்க வைத்துக்கொள்கிற வரைக்கும் ஆன்மிக அதிகாரத்தையும், அதன் மூலம் அரசியல் அதிகாரத்தையும் உயர்சாதி தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. எனவே மேல், கீழ் என்கிற அடுக்கு முறையை நியாயப்படுத்துகிற எல்லாமே பிராமணியம்தான். அது ஒரு ஒடுக்குமுறைக் கருத்தியல், அது பிராமணர்கள் இல்லாத இடத்திலும் இருக்கிறது. எப்போது பிற்படுத்தப்பட்ட ஒருவர், தாழ்த்தப்பட்டவரை சாதியின் பெயரால் ஒடுக்குகிறாரோ, அந்த ஒடுக்குமுறை உறவுக்குப் பெயர் பிராமணியம் என்று நாம் சொல்கிறோம். ஏனென்றால் இதைக் கற்றுக் கொடுத்தது அவர்கள்தான். ...more
Sugan liked this
37%
Flag icon
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்துக் குழந்தைகள் பனை ஓலைகளில் காற்றாடி செய்வார்கள். பூவரசு இலையை வைத்து ஊதல் செய்வார்கள். சிறு பொருளையேனும் தானே ஆக்கிக் கொள்கிற அந்தக் கலாச்சாரம் இப்போது அடிபட்டுப் போய்விட்டது. இப்போது எந்தக் குழந்தையும் தானே ஆக்கிக் கொள்வதில்லை. எல்லாம் கடைகளில் வாங்கிக் கொடுக்கப்பட்டு ‘ஆக்கம்’ என்கிற சுயமான உற்பத்தி உணர்வு அடிபட்டுப் போய்விடுகின்றது.
38%
Flag icon
பாரம்பரியமாக நாம் உப்பைப் பயன்படுத்துவதை எதிர்க்கிற விதத்தில் ‘நிறுத்து’ என்று அதிகாரத் தொனியில் தொலைக்காட்சி விளம்பரம் வருகிறது! அதில் வன்முறை இல்லையா? ‘உங்கள் மேனியின் சிவப்பழகு’ என்று சொல்வதில் வன்முறை இல்லையா? கருப்பாக இருக்கும் பெருவாரியான மக்களை அழகில்லை என்று தாழ்த்திவிட முடியுமா? சிவப்பு மட்டும்தான் அழகா? ஆயுத வன்முறையைவிட இது கொடூரமான வன்முறை இல்லையா? அரசியல் ஒடுக்குமுறையிலிருந்துகூட விடுபட்டு விடலாம். இந்தப் பண்பாட்டு ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவது கஷ்டம்.
Sugan liked this
56%
Flag icon
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மதுரையில் ஆயிரம் சமணர்களைக் கழுவேற்றி சம்பந்தர் ‘புண்ணியம்’ தேடிக் கொண்ட பிறகும் தமிழ்நாட்டின் தென்பகுதியில் சமணம் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை உயிரோடு இருந்தது.
Sugan liked this