நான் அன்பை தேடவில்லை, எப்போதும் எனக்கு சொந்தமாக, என் இச்சைக்கு வழங்கும் ஒருவள், அழகாக இருப்பது, என் நுண்ணுணர்வை கண்டுகொள்ளுவது இவைதான் அவள் செய்யவேண்டியது, என் பின்னால் எப்போதும் தொடரும் ஒருத்தி. நான் இல்லாமல் ஒரு கணமும் அவள் முழுமை கொள்ளக் கூடாது, நிறைவடையக் கூடாது. அப்படி நிறைவடைவதை என் தோல்வியாக மட்டுமே என்னால் காண இயலும்.