“கிறிஸ்தவம் பெரும் சோர்வை உலகமெங்கும் பரப்பிவிட்டது தோழர். உலகியல் மறுப்பையும் சரணாகதியையும் அது கற்பித்தது. தோல்வியைப் புனிதப்படுத்தியது. கிறிஸ்து யார்? தோல்வி அடைந்த ஓர் இலட்சியவாதி. அவரது தோல்வி தவிர்க்க முடியாதது. இருக்கும் விஷயங்களுக்குப் பதிலாக இல்லாத விஷயங்களை முன்வைக்க முயன்ற கனவுஜீவியின் சரிவு அது. அந்தத் தோல்வியை இரண்டாயிரம் வருடங்களாகக் கிறிஸ்தவம் மானுடத்தின் ஆகப் பெரிய இலட்சியமாக முன்னிறுத்தியது. கிறிஸ்துவின் முகம் காட்டுவது என்ன? துக்கம், புறக்கணிப்பு, தனிமை, நிராசை ஆகிய உணர்வுகளல்லவா? நமது வீடுகளில் அனைத்திலும் சிலுவையேறிய ஏசு, என் தேவனே என்னை ஏன் கைவிட்டீர் என்று ஓயாமல்
...more

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)