“மனம் என்பது இருவகையான செயல்பாடுகள் பின்னி உருவாகும் ஒரு ஓட்டம்தான். தருக்கமும் படிமமும். ஒன்று பலவீனமாகும்போது இன்னொன்று வலுப்படுகிறது. ஒன்று இன்னொன்றின்மீது படிய முற்படுகிறது. தத்துவவாதி தருக்கத்தின் சரடைப் பின்தொடர்கையில் கவிஞன் படிமங்களின் சரடைப் பின்தொடர்கிறான். இரண்டும் அதீத நிலைகள். அதீதநிலைகள் மூலம் மட்டும் அடையப்படக்கூடிய சில தருணங்கள் மன இயக்கத்தில் உண்டு. தத்துவவாதியும் கவிஞனும் அவற்றைத் தங்கள் மிகச் சிறந்த படைப்புக் கணங்களில் தொட்டுவிடக் கூடும். ஆனால் இவ்விரு ஓட்டங்களும் ஒரேயளவு தீவிரத்துடன் ஒன்றையொன்று பயன்படுத்திக் கொண்டபடி இயங்கும் படைப்பூக்கமே முழுமையானது.

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)