அகங்காரம் உள்ள அறிஞன்தான் உலகத்தில பெரிய முட்டாள். அவனாலத் தான் மத்தவங்களால நினைச்சுப் பாக்க முடியாத குரூரங்களைப் பண்ண முடியும். ஏன்னா ஒவ்வொரு செயலையும் மனுஷன் தனக்குத்தானே நியாயப்படுத்தியாகணும். அறிஞன் எதையும் தருக்கபூர்வமா, நியாயமானதாக மாத்திக்கிடுவான். பேரறிஞன் பூமியையே பெரும் பாவத்தில மூழ்கடிச்சிடுவான். ஸ்டாலின், ஹிட்லர் எல்லாருமே பெரிய அறிஞர்கள்தான்.”

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)