இறந்தவர்களால் நிரம்பியுள்ளது இந்த உலகம். ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் ஆயிரம் இறந்தவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய கண்ணீரும் குரோதமும் இச்சையும் அவன்மீது படிகின்றன. அவைதாம் அவனை ஆட்டி வைக்கின்றன. இல்லையேல் இந்த உலகம் இப்படிப் புரிந்து கொள்ள முடியாதபடி இயங்க ஒரு நியாயமும் இல்லை. திடீரென்று ஒரு மாபெரும் தொழிற்சாலையில் தொடர்புகள் சிதறிப்போன அசைவுகள் போல உள்ளது உலக இயக்கம். கிரீச்சிட்டும், மோதி உடைந்தும் தேய்வுற்றும் இயந்திரங்கள் ஓடும் பேரோசை. ஒழுங்கின்மையின் வன்முறை. ஆனால் கூர்ந்து கவனியுங்கள். ஒழுங்கு இல்லாமலுமில்லை. ஒவ்வொரு யந்திரத்தையும் ஆவிகள் இயக்குகின்றன, அவற்றின் குரூரப் புன்னகையையும்,
...more

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)