உங்க பேச்சுவார்த்தை மேஜை உண்டாகிறதுக்கு எத்தனை கோடி பேர் செத்திருக்காங்க. எத்தனை பேர் கண்ணீரும் ரத்தமும் சிந்தி மட்கிப் போயிருக்காங்க. அவங்க செத்தது சுரண்டலும் ஒடுக்குமுறையும் இல்லாத ஒரு புதிய உலகம் பிறக்கணும்கிறதுக்காக. அவங்களோட வாழ்க்கைய காரணமில்லாத சித்ரவதையா மாத்தின அநீதிகரமான சமூக அமைப்பு அவங்க பிள்ளைங்க காலத்திலயாவது இல்லாம ஆகணும்கிறதுக்காக. இன்னைக்கு சுரண்டல் சக்திகளுக்ககிட்ட பேரம் பேச ஒரு மேஜையை உருவாக்கி வச்சிட்டு இதுதான் மார்க்ஸிசத்துக்க உச்சகட்ட சாதனைன்னு சொன்னோம்னா அவங்க பண்ணின தியாகங்களுக்கு என்ன அர்த்தம்?

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)