விண்ணையும் மண்ணையும் இணைக்கும்படி எழுந்த பூதரூபமான லிங்கம். ஆனால் அது ஆவுடைமீது அமர்ந்திருக்க வேண்டும். ஆவுடை இல்லாத லிங்கம் அர்த்தமற்ற கற்பிண்டம் மட்டுமே. லிங்கமே ஞானமும் செயலும் ஆகும். ஆயினும் ஆவுடையே அதை நிலைநிறுத்தும் அடித்தளம். ஆவுடை சக்தியின் தாய்மைப்பீடம். தாய்மை பெண்களுக்குரியது என்று எண்ணியிருந்தேன். புரட்சியில் பெண்கள் இல்லாததனாலேயே அது பேரழிவைச் சந்தித்தது என்றும் எண்ணியிருந்தேன். இப்போது தெரிகிறது ஆவுடை ஒவ்வொரு மனதிலும் உண்டு. நம் ஞானமும் தீரமும் அதில்தான் முளைத்தெழ வேண்டும். அதில்தான் அடங்கவும் வேண்டும். அதில்லாத எழுச்சி வெறும் அகங்காரக் கொப்பளிப்பு. சரிந்து பூமிமீது விழுகையில்
...more

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)