“மார்க்ஸ் இதில இருக்கிற கருத்துமுதல்வாத அம்சத்தை நீக்கிட்டுப் பார்த்தார். ஹெகலோட தரிசனப்படி மேலான சமூகமும் மேலான மானுடனும் வரலாற்றுக்கு முன்னாலயே, வரலாற்றுக்கு அதீதமா, இருக்கக் கூடிய கருத்துக்கள். வரலாறுன்றது அந்தக் கருத்தின் பௌதிகமான வெளிப்பாடு மட்டும்தான். மார்க்ஸ் பௌதிகமான சக்திகள் தங்கள் போக்கில இயல்பா முரண்பட்டும், ஒன்று கலந்தும், முன்னகரக்கூடிய தன்னிச்சையான ஒரு பிரவாகமா வரலாற்றை உருவகிச்சார். இதுதான் மார்க்ஸியத்தின் தத்துவ அடிப்படை.”

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)