“ஆனா லெனின் அதை மாத்தினார். கலாச்சார, அரசியல் அமைப்புகளின் முயற்சியினால் மேற்கட்டுமானத்தில வரக்கூடிய மாற்றத்தினாலேயே சமூகத்தை மாத்தமுடியும்னு சொன்னார். மார்க்ஸின் தத்துவப்படி பொருளாதாரக் காரணிகளினால் இயல்பா புரட்சி வரணும். லெனின் அரசியல் நடவடிக்கை மூலம் புரட்சியைக் கொண்டு வந்தார். லெனின் ரஷ்யாவில நடத்தினது அதுதான். விழிப்புற்ற ஒரு சிறுபான்மையினர் அரசியல் நடவடிக்கை மூலமா புரட்சியைக் கொண்டுவந்து, பொதுவுடைமை சமூகத்தை உருவாக்க ஆரம்பிச்சாங்க. இது வால் நாயை ஆட்டிவைக்கிற மாதிரி. ரஷ்யாவில நடந்த சகல குளறுபடிகளுக்கும் காரணம் தடியால அடிச்சுப் பழுக்கவைக்க லெனின் செஞ்ச முயற்சிதான்.”

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)