மனம் என்பது நிகழ்காலத்திலிருந்து எதிர்காலம் நோக்கித் தாவும் ஒரு தொடர்சலனம். அதற்கு இறந்தகாலத்தின் ஒவ்வொரு விஷயமும் தூரம். இன்றும் நாளையும் ஒரு விஷயம் எப்படிப் பயன்படும் என்பதில் மட்டும்தான் அதற்கு அக்கறை. அது இயற்கைதான். இறந்த காலத்தை உதறாது வாழ்க்கை இயங்க முடியாது. இறந்தகாலம் அத்தனை பிரம்மாண்டமானது.

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)