உண்மை; ஆனா கட்சிக்கு எதிரானதுன்னு படுது. அதை கட்சி ஏத்துக்கிடுமா? அதை அறிவுபூர்வமா பேசி மறைக்க முடியும்னா அந்த வாய்ப்பைக் கட்சி தவற விடுமா? இங்கதான் காந்திக்கும் உங்களுக்கும் வித்தியாசம். காந்தி அசட்டுத்தனம்னு பிறருக்கு தோணற அளவுக்கு நெஞ்சத் திறந்துட்டு அந்த உண்மையைத் தேடிப் போவார். அதோட அவர் அழிஞ்சாலும் சரின்னு போவார். ஆனா உண்மை எவரையும் அழிச்சதில்லை. பொய் எதையும் வாழவிட்டதுமில்லை. பொய், அதைச் சொன்னவங்க எத்தனை மகத்தான மனிதாபிமானிகளா இருந்தாலும், எத்தனை பெரிய மேதைகளா இருந்தாலும், எதையும் உருவாக்காதுங்கிறதுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒரு வாழும் உதாரணம்.”

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)