காவிய முடிவுகள் காவியங்களுக்கு வெளியே ஒருபோதும் சாத்தியமாவதில்லை. எனவேதான் காவியங்களின் தீவிரமோ முழுமையோ ஒழுங்கோ இல்லாமல் வாழ்க்கை வெளிறிக் கிடக்கிறது போலும். வாழ்வின் இந்தக் கூசிக் குறுக வைக்கும் அர்த்தமின்மையிலிருந்து தப்பி இளைப்பாறும் பொருட்டு மனிதன் உருவாக்கிக் கொண்டவையே காவியங்கள்.

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)