மார்க்ஸியர்களின் அறம் என்ன என்ற அடிப்படை வினா உங்கள் உரையாடலின் அடியோட்டமாக எப்போதும் உள்ளது. மார்க்ஸியர்கள் இந்த உலகத்தை ஒரு பெரும் சுரண்டல் களமாகக் கருதுகிறார்கள். இங்குள்ள மானுடவாழ்வு துக்கம் நிரம்பியதாக இருப்பதற்கு இதுவே காரணம். யேசு இவ்வுலகு பாபத்தின் துக்கத்தால் நிரம்பியுள்ளது என்றார். புத்தர் அறியாமையும் ஆசையும் விளைவிக்கும் துக்கத்தால் நிரம்பியுள்ளது என்றார். மார்க்ஸியம் அத்தரிசனங்களின் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய, பரிணாமவாதத்திற்குப் பிந்தைய நீட்சியே என்று படுகிறது.

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)