துல்லியமான சொற்கள். அசைக்க முடியாத தர்க்கம். மனிதர்கள் இந்த அளவு தெளிவுடனும் நேர்த்தியுடனும் யோசிக்கலாமா? அதுவே ஒரு பாவம் என்று பட்டது. அதற்குப் பின்னால் அகம்பாவம் உள்ளது. அது இயற்கையை - கடவுளையா? அருணாசலம் புன்னகை புரிந்தான் - அவமரியாதை செய்வது போல் உள்ளது. இந்த அளவுக்குப் புத்திசாலியாக இருக்க, இந்த அளவுக்குத் தெளிவுடன் யோசிக்க, மனிதனுக்கு உரிமை இல்லை. இந்த அளவு கூர்மையுடன் இருக்கும் ஒருவனை எவையும் நெருங்காது...

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)