Balasubramaniam Vaidyanathan

22%
Flag icon
“ஆனா, சர்வாதிகாரம் செயல்படற முறை இது இல்லை. அது சமூகத்துக்க மேல ஏறி உக்காந்திருக்கு. நினைச்சா சமூகத்தை நிர்மூலம் பண்ற சக்தி அதன் கையில இருக்கு. சமூகம் இப்பிடி இருக்கணும்னு அது ஒரு திட்டத்தைப் போடுது. அதுக்கேற்ப சமூகத்தை அழிச்சு மறுபடியும் உருவாக்குது. அழிக்கத்தான் முடியும். மறுபடியும் உருவாக்க முடியல்லை. இதுதான் உலக வரலாற்றில் மறுபடியும் மறுபடியும் நிரூபணமாகியிருக்கு. ஒரு டாக்டர் தன்னோட நோயாளியோட உடம்பில் உறுப்புகள் வேற மாதிரி இணைஞ்சிருக்கலாம்னு நினைச்சு வெட்டி வெட்டி ஒட்ட ஆரம்பிச்சா என்ன ஆகும்? சமூகங்கிறது ஒரு யந்திரமில்லை. அது ஒரு உயிர். அதை தொழிற் புரட்சியோட வாரிசுகள் இன்னும் ...more
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating