பசி என்பது உண்மையில் ஒரேவிதமான அனுபவம் அல்ல ருசியான உணவு கிடைக்கும் என்ற உறுதி உள்ள ஒருவனுக்குப் பசி என்பது ஓர் இனிய அழைப்பாக இருக்கக்கூடும். கடுமையாக உழைத்தபிறகு பசி உடலெங்கும் - பரவுவது ஓர் இனிய அனுபவம். பசித்து வெகுதூரம் நடக்கும்போது பசி தூரத்தை அளக்கும் முழக்கோல். கணம் தோறும் சுருங்கிவரும் முழக்கோல். தனியறையில் பசித்துப் படுத்திருக்கையில் அது ஒரு ஓயாத சத்தம். காத்திருக்கும் போது நச்சரிப்பு. ஆனால் பசியின் பயங்கரம் அதற்கான உணவு கிடைக்கும் என்பது எவ்விதத்திலும் நிச்சயமற்ற ஒன்றாக இருக்கும்போதுதான் தெரியவரும். அந்தப் பசி அணைக்கப்படாது பெருகி நம் உயிரையே காவு கேட்கும் வாய்ப்பு உள்ளது என்று
...more

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)