ராணுவம்தான் உலகில் இன்றுவரை அரசியலாக இருந்துள்ளது. போரிடும் ராணுவம், பேசும் ராணுவம். அங்கு நுழையும் பெண்கள் தங்களையும் ஆண்களாக மாற்றிக் கொண்டவர்கள். ஆண்களின் சீருடைகளை அணிந்த பெண்சிப்பாய்கள். ஆண்குரலில் அடித்தொண்டையில் சொற்பெருக்காற்றும் மக்கள் பிரதிநிதிகள். அன்னையராக, தங்கள் இயல்பான மென்மையுடனும் கருணையுடனும், அவர்கள் அங்கு நுழைய முடிவதில்லை. பெண்களால் நடத்தப்பட்டால் புரட்சிகள் இவ்வாறு ரத்தவாடை வீசியிருக்குமா? கண்டிப்பாக இத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டிருக்காது. ஆண்களின் அமைப்புகளும் அரசுகளும் ஆண்களைப் போலவே இருக்கின்றன. வெளித்தோற்றத்தில் இரும்புக் கோட்டைகள். உள்ளே நெளிந்து உருகும் லாவா.
...more

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)