எல்லா சொற்களும் விலகிப்போக மரணம் மட்டும் துலங்கி நிற்கும் அபூர்வமான கணங்கள் அவை. பீதியோ துயரோ பதற்றமோ இன்றி பார்த்திருந்தேன். விளக்கங்கள் இல்லாத, அர்த்தங்கள் இல்லாத, எதிலும் பொருத்தம் கொள்ளாத ஒரு துண்டுபடுதல். அதை நெருங்குகையில் நமது அறியும் தன்னிலையும் துண்டுபட்டுப் போய்விடுகிறது. அப்போது மரணம் அறியப்படாததாகி எனவே இல்லாததாகிவிடுகிறது. உண்மையில், மரணத்தை நாம் அறிய முடியாது. அதிகபட்சம் அதன் முந்தைய கணம்வரை போக முடியும். அந்த முந்தைய கணம் என்பது வாழ்தலின் கணம்தான். வாழ்வில் பலவாறாகப் பிரதிபலிக்கும் மரணமே நாம் அறிந்தது.

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)