மனித குலத்தின் அகங்காரம். மண்ணின்மீது வாழ விதிக்கப்பட்டவன் மனிதன். மண்ணின் அடியில் உறங்கும் பெரும் பூதங்களை அவன் துயிலெழுப்பிவிட்டான். ஐரோப்பாவை ஒரு பெரும் பூதம் ஆட்டிப்படைக்கிறது. ஒரு பூதமல்ல, இரண்டு பூதங்கள். நிலக்கரியும் இரும்பும்! மண்ணின் அடியில் தூங்கிய ராட்சதனும் ராட்சசியும். அவை விசுவரூபம் கொண்டு எழுந்தன. அவை புணர்ந்து பெற்ற ராட்சதக் குழந்தைகள் பூமியெங்கும் நிரம்பின. கவச வண்டிகள், பீரங்கிகள், விமானங்கள், டிராக்டர்கள், மோட்டார்கள்... உலகை அவை சிதறடித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் பெரும்பசிக்கு கண்டங்களும் தேசங்களும் இரையாகின்றன. நாம்

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)