சித்தாந்தம்னாலே எனக்குப் பயமா இருக்கு. இப்ப சொன்னீங்களே எல்லாத்துக்கும் அரசியல்ல வேற அர்த்தம்னு. எப்படி அந்த வேற அர்த்தம் வருது தெரியுமா? சிந்தாந்தப் படுத்தறது வழியாத்தான். யேசுவின் அளவிட முடியாத கருணையை சித்தாந்தப்படுத்தினா ஆப்ரிக்க நாடுகளில் குடிநீர்ல விஷம் கலக்கி மதம் மாத்தற துணிவு வரும். கருணையே உருவான புத்தர் பேரைச் சொல்லி இனவெறியைத் தூண்ட முடியும். சித்தாந்தம் எதையும் எப்படியும் மாத்திடும்னு படுது; ஒரு கொடூர மந்திரவாதிய மாதிரி. சித்தாந்தங்களையும் சித்தாந்திகளையும் நான் பயப்படறேன்.”

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)