“உயிராசையைக் கேவலமாக ஏன் எண்ண வேண்டும்? அது இயல்பானது. வாழ்வு மீதான காதலின் விளைவு அது. தோழர் அந்திரியான், எனக்கு வாழ்ந்து போதவில்லை. மண்ணும் காற்றும் வானும் ஒளியும் நீரும் என் புலன்களுக்குப் பேரின்பம் தரக் கூடியவையாகவே இப்போதும் உள்ளன. அவ்வின்பத்தை அத்தனை சுலபமாகத் துறக்க என்னால் முடியாது. அதே சமயம் எனக்கு வாழ்வு வெறும் போகவெளியும் அல்ல. ஐம்புலன்களுக்கு நடுவே அவற்றை ஆளும் ஓர் ஆத்மாவும் எனக்குள்ளது. அதற்குரிய தேடல்களும் தேர்வுகளும் எனக்கு உண்டு. இவையிரண்டு தளங்களுக்கும் இடையே தீராத மோதல் உண்டு. அதன் விளைவாக சஞ்சலங்களும் சமரசங்களும் உண்டு.

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)