கோசாம்பியின் ‘ஐதீகமும் உண்மையும்’ நூலைப் படிக்கும்போது எழும் அந்த ஐயம் லெவிஸ்டராஸின் ‘பண்படா மனம்’ நூலைப் படிக்கும்போதும் எழுகிறது. இந்த அறிஞர்கள் எந்த அறிவுத் தளத்திலிருந்து பேசுகிறார்களோ அவை மானுடவியலும், வரலாறும், அரசியல் சித்தாந்தமும் அறிவொளிக் காலப் பகுத்தறிவுவாதத்தின் விளைவாக உருவானவை. அவற்றின் அடிப்படையான பகுப்பு - தொகுப்பு முறைகள் அறிவொளிக் காலத்தின் மிகப் பெரிய சிருஷ்டியான அறிவியங்கியலின் (எபிஸ்டமாலஜி) நியதிகள் சார்ந்தவை. இந்த ஆய்வு முறைகளினூடாக அவர்கள் பழங்குடிப் படிமங்களைப் பின்தொடரும்போது சென்றடையும் இடம் மிகமிக எல்லைக்குட்பட்டதேயாகும். உண்மையில் அது பழங்குடிப் படிமங்களுக்கு
...more

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)