இப்ப நாம பேச்சு வார்த்தையோட காலகட்டத்திற்கு வந்தாச்சு. ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயகத்துக்கு வந்து நாற்பது வருஷமாச்சு. இன்னும் நமக்கு ஜனநாயகம்னா என்னான்னு புரியலை. ஜனநாயகம் வழியா சர்வாதிகாரம்னு பொட்டைக்கனவு கண்டுட்டு இருக்கோம். ஸ்டாலினும் மாவோவும் நம்மை ஜனநாயகத்துக்குள்ள வர அனுமதிக்கலை. நமக்குத் தேர்தல் உண்டு. ஆனா சர்வாதிகாரிதான் மறுபடியும் மறுபடியும் ஜெயிச்சு வருவார்.

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)