சரித்திரம் முழுக்க ஜனங்கள் முட்டாக் கும்பலாத்தான் இருந்திருக்காங்க. அவங்களுக்கு எது நல்லதுண்ணு ஒருநாளும் அவங்களுக்குத் தெரியாது. தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம்னு சொன்னவன் மடையன் இல்லை. தொழிலாளி வர்க்க ஜனநாயகம்னு சொல்ல அவனுக்குத் தெரியாமலும் இல்லை. ஜனங்களால ஒரு மேலான அரசாங்கத்தை உண்டு பண்ணிக்க முடியாது. தனித்தனியா ஒவ்வொருத்தனும் யோக்கியமாத்தான் இருப்பான். கூட்டாச் சேந்தா அறிவுகெட்ட மந்தையா ஆயிடுவான். புத்தியுள்ளவன் இழுத்த இழுப்புக்குப் போகிற மந்தை. கசாப்புக் கடைக்காரன் பச்சையிலை வச்சு கூப்பிட்டா அந்தப்பக்கமாட்டு போகிற மந்தை, ஜனங்களுக்கு அறிவு கிடையாது. அறிவுள்ள புரலட்டேரியன்தான் அவங்களை வழி
...more

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)