தல்ஸ்தோயா? தஸ்தாவெஸ்கியா? இந்தக்கேள்வியைத் தேர்ந்த இலக்கிய வாசகர் ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேட்டுக்கொண்டிருப்பார்கள். எந்தவிதமான ஐயமும் இன்றி இரண்டிலொருவரைத் தேர்வு செய்து கூறுபவர்களின் இலக்கிய நுண்ணுணர்வை சந்தேகப்படுவேன். அவர்கள் இருவரையுமே அறியவில்லை என்று கூடக் கூறுவேன். ஏனெனில் இந்தக் கேள்வி மிகமிக அடிப்படையானது. மானுட ஆன்மிகத் தேடலின் இரு ஆதார நிலைப்பாடுகளை இருவரும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். ஆழ்ந்த சுயவிசாரணைக்குப் பிறகு விரிவான சுயகண்டடைதல் மற்றும் சுயவிளக்கங்களுக்குப் பிறகுதான் ஒருவன் ஒன்றைத் தேர்வுசெய்ய முடியும். முடிவை ஒரு சிறிய சந்தேகத்துடன் தான் முன்வைக்கவும் முடியும்.
...more

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)