நாம் வாழும் இந்த உலகம் பௌதிகவிதிகளின் இரும்புப் பிடிக்குள் சிக்கியுள்ளது. இங்கிருந்து நாம் சிந்திப்பவையெல்லாம் அவ்விதிகளின் நீட்சியாகவோ, அல்லது அவ்விதிக்குக் கட்டுப்பட்ட சிறு விலகல்களாகவோ மட்டுமே உள்ளன. இந்தக் காலத்தில், இந்த இடத்தில் செல்லுபடியாகும் உபயோக மதிப்புள்ள சிந்தனைகளை மட்டுமே இங்கிருந்துகொண்டு நம்மால் உருவாக்க முடியும். காலத்தையும் இடத்தையும் தாண்டிச் செல்ல இப்பூமியின் பௌதிக ஒழுங்கைக் கலைத்துப் போட்டேயாக வேண்டும். மனம் கலையும்போது ஒன்று தெரியவரும். பூமியின் பெளதிக ஒழுங்கு என்பது உண்மையில் நமது மூளையின் பௌதிக ஒழுங்கேயாகும்.

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)