Balasubramaniam Vaidyanathan

34%
Flag icon
மனிதன் எப்போதும் தனிமையானவன், தனிமையை உடைக்க பிரயத்தனப்படுபவன். நட்பு மூலம், பகைமை மூலம், ரத்தம் மூலம் அவன் பிற மனிதரிடம் உறவு கொள்ள முடிகிறது. ஆனால் மிக அதிகபட்ச உறவு தியாகம் மூலமே சாத்தியமாகிறது. தியாகத்தை பிறர் அவ்வளவு எளிதாக ஒதுக்கிவிட முடியாது. தியாகம் மூலம் அவன் தன்னை அடையாளப்படுத்தித் தனிமைப்படுத்தும் சுயம் என்ற எல்லைக் கோட்டுச் சட்டத்தை உடைக்கிறான். நான் என்ற சொல்லை விட்டுவிட்டு நாம் என்று சொல்வதற்கான தகுதியைப் பெறுகிறான். தகுதியா? அது அதிகாரமல்லவா? தியாகம் என்பது அதிகார இச்சையின் விளைவல்லவா?”
பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]
Rate this book
Clear rating