நான் தோற்கடிக்கப்பட்டேனா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது அவர்களல்ல, நான்தான். ஆம், தோற்றுவிட்டேன் என்று நான் எனக்குள் முழுமையாக ஒத்துக்கொள்ளும்போதுதான் என் தோல்வி நிகழ்கிறது. எல்லாவிதமான சுயநிந்தனைகளுக்கும் சுய எள்ளல்களுக்கும் பிறகு என் மையமான அறவுணர்வு உயிர்த்தீவிரம் குன்றாமலேயே எஞ்சுகிறது. ஒவ்வொரு எதிர்த் தர்க்கமும், ஒவ்வொரு நிதரிசனமும், ஒவ்வொரு திட்டவட்டமான ஆதாரமும் அதற்கு நீரூற்றவே செய்கின்றன. அதுவே என் சாரம். நான் விதை. அது விதையிலுறங்கும் தாவரம். தான் மட்குவது அது முளைப்பதற்காகத்தான்.

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)