சிந்தனைத் திறனே நம்மை நீதியிலிருந்து விலக்குகிறது. சுயநலத்தின்மீது நம்மை ஏற்றி வெகுதூரம் இட்டுச் செல்கிறது. ஒருவன் எத்தனை தூரம் பாமரனோ அத்தனை தூரம் நீதிக்கு அருகில் இருக்கிறான். எத்தனை தூரம் வெகுளியோ அத்தனை தூரம் நீதிக்கு அருகில் இருக்கிறான். நம் தேவமகன் சும்மா சொல்லவில்லை - நாம் குழந்தைகள் போல ஆகாவிடில் அவனருகே நெருங்க முடியாது என்று. நாம் நீதியின்பால் பசி தாகமுடையவர்களாக இருக்க வேண்டும் என்று. நீதி பசி போல, தாகம் போல, இயற்கையின் ஒரு சக்தி. இயற்கையைப் புரிந்து கொண்டால் அதையும் புரிந்துகொள்ள முடியும். இயற்கையின் உள்ளே வாழ்ந்தால்தான் நீதியை வாழ்வாகக் கொள்ளவும் முடியும்.

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)