எதை நான் ஒவ்வொரு மானுடனுக்கும் உரியது என்று கருதுகிறேனோ அதையே என் பிறப்புரிமையாகவும் கருத முடியும் அல்லவா? உயிர்வாழும் உரிமை, சமத்துவத்திற்கான உரிமை, தன்மானத்திற்கான உரிமை. ஏதாவது ஒரு நிபந்தனையின் பெயரால், ஒரு சந்தர்ப்பத்தின் பொருட்டு, அதைப் பிறருக்கு மறுப்பேன் என்றால் அதே நிபந்தனைகளின் பொருட்டு அது எனக்கு மறுக்கப்படுவதையும் தத்துவார்த்தமாக ஏற்றுக்கொள்கிறேன் அல்லவா? ஆனால் உரிமை என்பது நிபந்தனைகளில்லாதது. சமரசங்களுக்கு அப்பாற்பட்டது. அத்தகைய உரிமைகளின் பொருட்டே நான் உயிரைத் தர முடியும். என் சந்ததிகளின் உயிரைப் பணயம் வைக்க முடியும். என் வாழ்வின் இறுதி உடைமையையும் வைத்துப் போரிட முடியும்.
...more

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)