பகுத்தறிவு (அதாவது பௌதிக விதிகள் சார்ந்த புறவய உலகப்பார்வை) எங்கு தொடங்குகிறதோ அதுவே வரலாற்றின் தொடக்கப்புள்ளி என்று அது கருதியது. அதற்கு முந்தைய காலங்களை ஒட்டுமொத்தமாக ‘வரலாற்றுக்கு முந்தைய கால கட்டம்’ என்று உருவகித்தது. யோசித்துப் பார்த்தால் மனிதகுலம் புதை பொருளாய்வில் (வரலாற்றாய்விலேயேகூட) எப்போதும் பகுத்தறிவின் தடயங்களேயே. தேடி வந்துள்ளது என்பது தெரியவரும். பகுத்தறிவையும் கலாச்சாரத்தையும் ஒன்றெனக் கருதிய ஒரு காலகட்டத்தின் சிருஷ்டியே மார்க்ஸியம். லூயிஸ் மார்கனின் மானுடவியலின் ஆதாரவிதியே பகுத்தறிவின் அளவுகோலை வைத்து மானுட இனங்களைத் தரப்படுத்துவதுதான். அந்த அணுகுமுறையின் தொடர்ச்சியே
...more

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)