ஒரு மேலான விஷயத்துக்காக தியாகம் பண்றது தான் லட்சியவாதம்.” “இப்ப நீங்க சொன்னதுல ரெண்டு பார்வைகள் அடங்கியிருக்கு. ஒண்ணு இப்ப இருக்கிற வாழ்க்கை சரியில்லை, அல்லது போதலை. அதை மாத்தணும்கிற கனவு முதல் அம்சம். அதுதான் லட்சியம். ரெண்டாவது விஷயம் தியாகம். என்னையும் உள்ளடக்கின இந்த வாழ்க்கையை மாத்தியமைக்க நான் முயற்சி பண்றேன். ஆனா அதன் பலன்களை நான் அனுபவிக்க முடியாது. என்னோட அடுத்த தலைமுறைக்கு அதைக் குடுத்திட்டுப் போறேன். இதான் தியாகத்துக்கு அடிப்படை மனோபாவம், இல்லையா?” “ஆமா...” “வாழ்க்கையை எதன் அடிப்படைல மாத்தியமைக்கணும்னு நினைக்கிறோம்?” “வாழ்க்கையை பரிசீலிச்சுப்பாத்து... அதுக்க போதாமைகளை உணர்ந்து.”
...more

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)