பொது அறங்களை நாம் மீறும்போது நம் ஆழத்தில் ஒருபோதும் சரிசெய்ய முடியாத விரிசல் ஒன்று நிகழ்ந்துவிடுகிறது. அதன்பிறகு எனக்கு இப்படி நிகழலாமா, இது நியாயமா என்ற ஆங்காரம் நம் அடிவயிற்றிலிருந்து பீறிடாது. நமது நீதியுணர்வுதான் பயங்கரமான போர்ஆயுதமாகிறது. அணையாத நெருப்பாக தலைமுறைச் சங்கிலிகளுக்கு அதுதான் கைமாற்றப்படுகிறது. நமது நீதியுணர்வு உடைபட்ட பிறகு நம்மிடம் எஞ்சுவதென்ன? வாழ்க்கை ஒரு வலிமை விளையாட்டு என்ற வனநீதியல்லவா? முதுகு வளைந்து ஏதென் தோட்டத்திற்குள் மீண்டும் நுழைந்துவிடுகிறோம்.

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)