எந்திரத்தனமாக இயங்கியலை அனைத்திற்கும் ஆதாரமாகக் கண்ட மார்க்ஸியர் இப்போது புற எல்லைகளுக்கு நகர்த்தப்பட்டு விட்டார்கள். ஐன்ஸ்டீனின் சார்நிலைவாதத்திற்குப் பிறகு மெய்யியல் ரீதியாக மார்க்ஸியம் எதிர்கொண்ட சவால்கள் பற்பல. இயங்கியல் பொருள் முதல்வாதம் பிரபஞ்சவியல் ரீதியாக செல்லுபடியாகக் கூடியது அல்ல என்று, மெலுகின்களின் கழைக்கூத்தாட்டங்களை மீறி, நவீன பௌதிகம் நிறுவிவிட்டது. இன்று பிரபஞ்சவியல் தரிசனம் ஏதுமின்றி, மண்ணில் ஒரு எளிய எந்திரமாகக் கைவிடப்பட்டுக் கிடக்கிறது செவ்வியல் மார்க்ஸியம். மண்ணில் வாழும் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு செயலுக்கும் மனிதர்களுக்கு பிரபஞ்சவியல் ரீதியான அகத்தொடர்பு தேவையாக ஆகிறது.
...more

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)