உலகை ஆக்கும் அடிப்படைச் சக்தியே அதுதான் என்று. அதுதான் செங்கிஸ்கானையும், அலெக்ஸாண்டரையும் தைமூரையும், நெப்போலியனையும் இயக்கியது. கெதே அதை எலிமென்டல் பவர் என்கிறார். நாம் நேர் எதிராகக் கற்பனை செய்து கொள்கிறோம். மார்க்ஸும். எங்கல்ஸும், லெனினும், ஹெகலும் எல்லாம் அந்த சக்தியால் தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்ட கருவிகள்தாம். கருவிகள் பயன்படுத்தப்பட்ட பிறகு தூக்கி வீசப்படுகின்றன. பயன்படுத்தலினூடாக அழிகின்றன. பயனற்றவை அழிக்கப்படுகின்றன.

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)