காமம் என்பது பணிவுள்ள வீட்டு மிருகம் அல்ல. நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஊர்தி அது. அதில் வேகமூட்டி உண்டு. ஆனால் நிறுத்தக்கருவி இல்லை. எரிபொருள் தீர்ந்து அது நிற்க வேண்டும். காமம் மனிதனை எங்கெங்கு இட்டுச் செல்கிறது! அதை அஞ்சி, எம்பிப் பாய்ந்து, அதிர்ஷ்டவசமாக மெய்ஞ்ஞானத்தின் கிளையைப் பற்றிக் கொண்டவர்கள் உண்டு அருணகிரிநாதரைப் போல. அதை அஞ்சி முடிவற்ற சுழற்பாதையில் ஓடி ஓடி அதன் எதிரே வந்து நின்று மூச்சிரைத்தவர்கள் உண்டு. தல்ஸ்தோயைப்போல. தூங்கும் அதன் காதைப் பிடித்திழுத்து சீண்டி விளையாடி அதன் உதிரப் பசிக்கு உடலைத் தந்து மகிழ்ந்தவர்கள் உண்டு; மாப்பசானைப் போல முடிவற்ற எதிரிகள், காமம் என்பது ஒரு
...more

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)