கருத்தியலின் ஒரு தரப்பை பிறர்மீது வைத்து வெற்றிபெறும் பொருட்டு மட்டும் வன்முறை கையாளப்படுவதில்லை. அது ஓர் இறுதிச் செயல்பாடு மட்டுமே. முதலில் கருத்தியலின் தன் தரப்பை தனக்கே நிறுவிக்கொள்வதற்கு வன்முறை அவசியமாகிறது. ஏனெனில் சகஜநிலையில் எந்த மனித மனமும் எந்தக் கருத்தையும் பூரணமாக நம்பி ஏற்பதில்லை. மனித மனமெனும் பிரம்மாண்டமான விவாதக்களத்தில் வெறும் ஒரு தரப்பாக அது ஆகிவிடுகிறது. வலுவான நம்பிக்கையாக ஆகாதபோது எந்தக் கருத்தும் ஒரு பௌதிக சக்தியாக ஆவதில்லை. மரணத்தின் கீழ் மனித மனம் முனை கொள்ளும்போது அம்முனை அக்கருத்தாக இருக்கச் செய்ய ஆயுதத்தால் முடியும். ஆகவே ஒருவகையில் ஆயுதம் என்பது தூலம்கொண்ட
...more

![பின்தொடரும் நிழலின் குரல் [Pinthodarum Nizhalin Kural]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1634387732l/59358311._SY475_.jpg)